ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கன்னடத்தில் கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை எடுத்து மிகப்பெரிய வெற்றி படங்களாக மாற்றி முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல். தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் செப்டம்பர் 28ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை பிரசாந்த் நீல் இயக்க உள்ளார். இதற்கிடையே தெலுங்கில் உருவாகும் ஒரு படத்திற்கு கதை மட்டும் எழுத இருக்கிறார் பிரசாந்த் நீல்.
சலார் படத்தை தெலுங்கில் தயாரித்து வரும் கேஜிஎப் பட தயாரிப்பாளரான விஜய் கிரஹந்தூர், தெலுங்கில் இன்னொரு படத்தையும் தயாரிக்கிறார். கவி ரெட்டி என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகனாக அவருடைய உறவினர் ஆதர்ஷ் பாலகிருஷ்ணா என்பவர் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தான் இயக்குனர் பிரசாந்த் நீல் கதை எழுதுகிறார். தன்னை கேஜிஎப் படம் மூலம் கைதூக்கி விட்ட தயாரிப்பாளருக்கு நன்றி கடனாக இதை செய்கிறார் பிரசாந்த் நீல்.