துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான படம் 'ஆதி புருஷ்'. இப்படத்திற்கான புரமோஷனை படக்குழு சரியாக நடத்தாத நிலையிலும் இப்படம் 450 கோடி வசூலித்துள்ளது. இந்த வசூல் பற்றிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது. திருப்பதியில் நடைபெற்ற ஒரே ஒரு நிகழ்ச்சியைத் தவிர இப்படத்திற்காக வேறு எங்குமே பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. ஏன், அதைத் தவிர்த்தார்கள் என்பதற்கும் பதிலில்லை.
இதனிடையே, இப்படம் 450 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டாலும் வசூல் ரீதியாக தோல்வியை நோக்கிப் போவதாகத்தான் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் மட்டும் இப்படத்தின் மொத்த வசூல் 100 கோடியைக் கடந்துள்ளது. தெலுங்கில் 80 கோடி, ஹிந்தியில் 70 கோடி, கர்நாடகாவில் 10 கோடி, தமிழகத்தில் 2 கோடி, வெளிநாடுகளில் 25 கோடி, கேரளாவில் 1 கோடி என நிகர வசூல் கிடைத்துள்ளதாம். 250 கோடி வரை வியாபாரம் நடந்துள்ள இப்படத்திற்கான நிகர வசூல் 188 கோடி. இன்னும் 62 கோடி வரை வசூலித்தால் மட்டுமே இப்படம் மொத்த வியாபாரத்தில் லாபத்தைக் கடக்கும் என்கிறார்கள். அடுத்து வரும் நாட்களில் இப்படம் ஓடினாலும் அந்தத் தொகை வசூலிக்க வாய்ப்பில்லையாம்.
படத்திற்காக எழுந்த சர்ச்சைகள்தான் இப்படத்தின் வசூலைப் பாதித்துள்ளது என்பது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களின் கருத்தாக உள்ளது. பிரபாஸ் நடித்து வெளிவந்த 'சாஹோ, ராதேஷ்யாம்' படங்கள் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்த நிலையில் அந்த வரிசையில் இப்படமும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.