ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் ஒவ்வொரு மாதத்தின் இறுதியில் சமூகவலைத்தளத்தின் மூலம் தனது ரசிகர்களுடன் உரையாடுவார், அவர்களின் கேள்விகளுக்கு சுவையாக பதில் அளிப்பார். அந்த வகையில் இந்த மாத்திற்கான கலந்துரையாடலில் அவர் கூறியதாவது:
நான் இன்று வரை தொடர்ந்து கடைபிடித்து வரும் விஷயம் இதுதான். நான் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முழு பின்னணியும், அதன் சித்தாந்தத்தையும் எழுத வேண்டும் என விரும்புகிறேன். சில தருணங்களில் அதனை இயக்குநர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். சில தருணங்களில் எனக்குள் தோன்றிய விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் எனக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்கிறேன். அது ஒரு கவிதையாகவோ அல்லது முழு கதையாக கூட இருக்கலாம்.
ஜவான் படம் வெளியீட்டிற்கு முழுமையாக தயார் நிலையில் உள்ளது. நான் தியேட்டரில் சென்று படம் பார்த்து மகிழ்ந்த இளமை காலத்தை போன்ற அனுபவத்தை ஜவான் உங்களுக்கு தரும். சரியான நேரத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கும், பெறுவதற்கும் பொக்கிஷம் போல் தயாராக இருக்கிறது. என்றார்.
இந்த உரையாடலின் போது ரசிகர் ஒருவர் “எனக்கு பிறக்கப்போகும் இரட்டை குழந்தைகளுக்கு ஜவான், பதான் என்ற பெயர் வைக்க திட்டமிட்டிருக்கிறேன்” என்றார். இதற்கு பதில் அளித்த ஷாருக்கான் “உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் எனது வாழ்த்துக்கள். உங்கள் குழந்தைக்கு வேறு ஏதாவது சிறப்பான பெயரை வைக்கலாம்” என்றார்.