ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்து வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. சூர்யா இதுவரை நடித்த படங்களில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகிறது. இதில் சூர்யா 10க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். இப்படியான நிலையில் தற்போது கங்குவா படத்தின் பாடல் காட்சி ஒன்று கொடைக்கானலில் படமாக்கப்பட்டு உள்ளது. சூர்யாவுடன் இணைந்து 500க்கும் அதிகமான நடன கலைஞர்கள் இடம் பெற்ற இந்த பாடல் காட்சிக்கு ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டுக்கூத்து என்ற பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக்ஷித் நடனம் அமைத்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற பாட்டுக்கு நடனம் அமைத்தவர், சூர்யா பட பாடலுக்கும் நடனம் அமைத்திருப்பதால் இந்த பாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.