சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழ் சினிமாவில் பல முன்னணி கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியவர் ரவீணா ரவி. தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் கதாநாயகியாகவும் அறிமுகமானார். அதன்பின் சில படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். கடந்த வருடம் வெளியான 'லவ் டுடே' படத்தில் நாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாகவும், யோகி பாபுவின் மணப் பெண்ணாகவும் நடித்துள்ளார்.
நேற்று முன்தினம் வெளியான 'மாமன்னன்' படத்தில் படத்தின் வில்லனான பகத் பாசில் மனைவியாக நடித்துள்ளார். படத்தில் சில காட்சிகளில் மட்டுமே இருக்கும் சிறிய கதாபாத்திரம். ஆனால், 'டப்பிங்' உலகில் கதாநாயகியான அவருக்கே படத்தில் ஒரு வசனம் கூட வைக்கவில்லை. படத்தில் அவருடைய குரலைக் கேட்கவே முடியாது. இது பற்றி சமூக வலைத்தளங்களிலும் பலர் கருத்துக்களைப் பதிவிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் ரவீணா ரவி, “இந்தப் படத்தில் நான் பகத் பாசிலின் ஜோடியாக நடித்துள்ளேன். குறைவான நேரம்தான் திரையில்… வசனங்களும் கிடையாது, இருந்தாலும் நட்சத்திர நடிகர்களுடன் நடித்தது எனக்கு ஆசீர்வாதம், திறமையான குழுவினர், ஏஆர் ரகுமான் இசை,” என இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு ஆகியோரையும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.