தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
தமிழ் சினிமாவில் பல முன்னணி கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியவர் ரவீணா ரவி. தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் கதாநாயகியாகவும் அறிமுகமானார். அதன்பின் சில படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். கடந்த வருடம் வெளியான 'லவ் டுடே' படத்தில் நாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாகவும், யோகி பாபுவின் மணப் பெண்ணாகவும் நடித்துள்ளார்.
நேற்று முன்தினம் வெளியான 'மாமன்னன்' படத்தில் படத்தின் வில்லனான பகத் பாசில் மனைவியாக நடித்துள்ளார். படத்தில் சில காட்சிகளில் மட்டுமே இருக்கும் சிறிய கதாபாத்திரம். ஆனால், 'டப்பிங்' உலகில் கதாநாயகியான அவருக்கே படத்தில் ஒரு வசனம் கூட வைக்கவில்லை. படத்தில் அவருடைய குரலைக் கேட்கவே முடியாது. இது பற்றி சமூக வலைத்தளங்களிலும் பலர் கருத்துக்களைப் பதிவிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் ரவீணா ரவி, “இந்தப் படத்தில் நான் பகத் பாசிலின் ஜோடியாக நடித்துள்ளேன். குறைவான நேரம்தான் திரையில்… வசனங்களும் கிடையாது, இருந்தாலும் நட்சத்திர நடிகர்களுடன் நடித்தது எனக்கு ஆசீர்வாதம், திறமையான குழுவினர், ஏஆர் ரகுமான் இசை,” என இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு ஆகியோரையும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.