ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர், நடிகையர் - தயாரிப்பாளர்கள் இடையே நிலவும் மோதல் தொடர்பாக, நடிகர் சங்க நிர்வாகிகள் பஞ்சாயத்து நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் தனுஷ், சிம்பு, அதர்வா, எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, யோகிபாபு; நடிகையரில் அமலாபால், லட்சுமி ராய், சோனியா அகர்வால் ஆகியோர் மீது, தயாரிப்பாளர்கள் சிலர், நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரில், 'சில நடிகர்கள், கொடுத்த கால்ஷீட்டின்படி நடித்துக் கொடுக்கவில்லை. சில நடிகையர் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் உறுப்பினர் இல்லாதவர்களை உதவியாளர்களாக வைத்துள்ளனர்.
பாதுகாவலர்களாகவும் அழைத்து வருகின்றனர். அவர்களுக்கு சம்பளம் கேட்கின்றனர்' என, கூறப்பட்டுள்ளது. 'தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களை உதவியாளர்களாக வைத்திருந்தால், சம்பளம் தருவோம்' என, தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் தனுஷ், சிம்பு, அதர்வா, யோகிபாபு மீது, 'ரெட் கார்டு' போடும் நிலையை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, தயாரிப்பாளர்கள் சங்கத்தில், நடிகர்கள் சிலரும் புகார் மனு அளித்துள்ளனர். புகாரில், 'எங்களிடம் கால்ஷீட் பெற்ற தயாரிப்பாளர்கள் சரிவர படப்பிடிப்பு நடத்தாமல், உப்புமா கம்பெனி தயாரிப்பாளர்களாக செயல்படுகின்றனர்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், பூச்சி முருகன், தயாரிப்பாளர் சங்க நிர்வாகி முரளி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன நிர்வாகி செல்வமணி இடையே முத்தரப்பு பேச்சு நடந்தது. நடிகர்களுக்கு ரெட்கார்டு விதிக்கக் கூடாது எனக் கூறி, புகார் கடிதங்களை ஆதாரமாக காட்டி, பூச்சி முருகன் பஞ்சாயத்து நடத்திய பின், அவர்களின் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.