2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
உலக சினிமா வரலாற்றில் மிகப்பெரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருதுதான். ஒரு பக்கம் ஆஸ்கர் விருதுகளை பெறுவது பெருமை என்கிற போட்டியில் இந்தியாவிலிருந்து குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து பலரும் தங்களது படைப்புகளை அனுப்பி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க இந்த 2023ம் வருடத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும் படங்களை தேர்வு செய்வதற்கு என 398 பேர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் இயக்குனர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், இசையமைப்பாளர் மரகதமணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதே சமயம் இந்த பட்டியலில் பெரிதாக வெளியே தெரியாமல் போன இன்னொரு நபரும் இருக்கிறார். அவர்தான் கேரளாவை சேர்ந்த விஎப்எக்ஸ் நிபுணர் சனத். இவர் மலையாளத்தில் புலிமுருகன், தெலுங்கில் பாகுபலி உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களுக்கு விஎப்எக்ஸ் பணியில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தவர். தற்போது ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவில் இடம் பெறுபவர்கள் 19 வகையான பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் விஎப்எக்ஸ் பிரிவில் சனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.