தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா, தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் காமெடியனாகவும் ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விருது நிகழ்ச்சிகளில் ஆங்கரிங்கும் செய்ய வருகிறார். அவருக்கு தற்போது வெள்ளித்திரையில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் தேடி வருகிறது.
இந்நிலையில், தனக்கு சம்பளமாக கிடைக்கும் பணத்தில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வரும் பாலா, குழந்தைகளின் படிப்பு, முதியோர்களின் பராமரிப்பு என ஏகப்பட்ட நல்ல காரியங்களை செய்து வருகிறார். அந்த வரிசையில் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அவர் முதியோர் இல்லத்திற்காக புதிதாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார்.
அந்த ஆம்புலன்ஸ் முதியோர் இல்லத்தில் இருக்கும் வயதானவர்களுக்கு பரிசோதனை நேரங்களில் பயன்படும் என்றும், தவிர முதியோர் இல்லத்தை சுற்றி இருக்கும் வயதானவர்களுக்கும் இலவசமாக சேவை வழங்கும் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து இதுபோன்ற பல நல்ல விஷயங்களில் ஈடுபடும் பாலாவின் குணத்தை பலரும் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.