பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
சீனாவை பூர்வீகமாக கொண்ட ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான். போலீஸ் ஸ்டோரி, டிரங்கன் மாஸ்டர், ரஷ் ஹவர், கராத்தே கிட் உள்ளிட்ட பல படங்களின் மூலம் உலக புகழ்பெற்றவர். இவரது படங்கள் உலகம் முழுவதும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டு வருகிறது. 'கராத்தே கிட் 2' படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் தனக்கு வயதாகி வருவதை சமீபத்தில் குறிப்பிட்ட ஜாக்கிசான் 'வயது முதிர்வை யாராலும் தடுக்க முடியாது. கடந்துவிட்ட இளமை யாருக்கும் திரும்பி வராது. அதற்கு நான் விதிவிலக்கல்ல' என்று தெரிவித்திருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு முதுமை காரணமாக சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்த அவர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது வயதிற்கேற்ற வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஜாக்கிசான் சாரிடபிள் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி உள்ள அவர், அதன்மூலம் 3,400 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொத்துகளை பல்வேறு அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். இந்த தொகை ஏழை மக்களின் மருத்துவம், மற்றும் கல்விக்காக செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறும்போது, “சிறிய வயதில் வறுமையால் தவித்திருக்கிறேன். அந்த கஷ்டம் எனக்கு தெரியும். நான் பட்ட கஷ்டங்கள் மற்றவர்கள் படக்கூடாது என்பதால்தான் இந்த முயற்சி. மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது வரும் சந்தோஷம் அளவிட முடியாதது'' என்று குறிப்பிட்டுள்ளார்.