ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை இரட்டையர்கள். இசை கற்றது எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம். 1914ம் ஆண்டு பிறந்த எஸ்.எம்.சுப்பையா நாயுடு, 1976ம் ஆண்டு வரை இசையமைத்து வந்தார். பிறகு பக்கவாதத்தால் படுத்த படுக்கையானார்.
அந்த சமயத்தில்தான், எம்.எஸ்.விஸ்வநாதன், அவருக்காகவே இசை நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்ச்சி மூலம் வசூலான ஒருலட்சம் ரூபாயை சுப்பையா நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கினார். 45 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் ரூபாய் என்பது இன்றைக்கு பல கோடி. 1979-ம் ஆண்டு மறைந்தார் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
''மெல்லிசை மன்னர்கள் என்று எங்களுக்குப் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். திரை இசையில், அந்த மெல்லிசை எப்படி இருக்க வேண்டும் என்பதை, எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடமும், ஜி.ராமநாதனிடமும்தான் கற்றுக் கொண்டோம். இவர்களை குரு ஸ்தானத்தில் வைத்துப் போற்றுகிறோம்' என்று மெல்லிசை மன்னர்கள் பல மேடைகளில் பேசியிருக்கிறார்கள்.
எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் 46வது நினைவு நாள் இன்று.