23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
ஹன்சிகா, ஆதி கூட்டணியில் விரைவில் பாட்னர் என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் கதை மற்றும் கதாபாத்திரம் குறித்து ஹன்சிகா கூறும்போது. நண்பர்களான யோகிபாபு மற்றும் ஆதி இருவரும் முதல் நாள் இரவு தூங்கி மறுநாள் எழுந்திருக்கும்போது யோகிபாபு ஒரு அழகிய பெண்ணாக மாறியிருப்பார்.. அந்த பெண் நான் தான். அதன்பிறகு பெண்ணாக இருந்தாலும் யோகிபாபுவின் நடை உடை பாவனைகளை பின்பற்றி படம் முழுவதும் அவரைப் போலவே நடித்துள்ளேன். இதற்கு முன்பு ஆண் வேடமிட்டு பல நடிகைகள் நடித்திருந்தாலும் ஒரு பெண் தோற்றத்தில் இருந்துகொண்டு ஆணின் உடல் மொழியை வெளிப்படுத்தி வேறு யாரும் நடித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை” என்று கூறினார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்துள்ள ஆதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு மரகத நாணயம் என்கிற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் நாயகி நிக்கி கல்ராணி திடீரென இதுபோன்று நடிகர் முனீஸ்காந்தின் ஆவி புகுந்தது போல மாறி அவரைப் போலவே நடந்து கொள்வார். இந்த விஷயத்தை ஹன்சிகாவுக்கு ஆதி சொல்லவில்லையா ? இல்லை அவரும் மறந்து விட்டாரா?
அதேபோல மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதிகாசா என்கிற திரைப்படம் வெளியானது. வெவ்வேறு இடங்களில் வசிக்கும் அந்த படத்தின் நாயகன் நாயகியும் புராதான கால சம்பந்தப்பட்ட இரண்டு மோதிரங்களை ஒன்றாக அணியும்போது நாயகன் இங்கே நாயகியாகவும் அங்கே நாயகி நாயகன் போன்றும் உருமாறி இருப்பார்கள். இருவரும் கிட்டத்தட்ட படம் முழுவதும் தங்களது உடல்மொழியை மாற்றி நடித்திருப்பார்கள். அதனால் ஹன்சிகா நடித்திருக்கும் கதாபாத்திரம் சினிமாவுக்கு ஒன்று புதிதல்ல.