மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

நடிகை ராஷ்மிகா மந்தனாவை போலவே அவருக்கு அடுத்ததாக குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற நடிகை என்றால் அது கிர்த்தி ஷெட்டி தான். தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் இளம் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் இவர் மலையாளத்திலும் அடியெடுத்து வைத்து வரலாற்று படம் ஒன்றில் நடித்து வருகிறார். 2 மாதங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி படத்தில் நடித்திருந்தார் கிர்த்தி ஷெட்டி.
இந்த நிலையில் சில தினங்களாக கிர்த்தி ஷெட்டியை பிரபல வாரிசு நடிகர் ஒருவர் தனது கட்டுப்பாட்டிற்குள் வைக்க முயற்சிப்பதாகவும் தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் தன்னுடன் கம்பெனி கொடுக்க வேண்டும் என துன்புறுத்துவதாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது கிர்த்தி ஷெட்டியே இந்த செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.
“கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படி ஒரு செய்தி வெளியானபோதே பார்த்தேன்.. தானாகவே அது அமுங்கி போய்விடும் என்று நினைத்தால் அது பெரிய அளவில் பரவ ஆரம்பித்தது. இதற்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தான் இந்த பதிவை இட்டுள்ளேன். அதில் சொல்லப்பட்ட செய்திகள் எதுவுமே உண்மை இல்லை.. எல்லாமே இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகள்” என்று கூறியுள்ளார் கிர்த்தி ஷெட்டி.