ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தற்போது ரஜினிகாந்த், சிவராஜ் குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தை இயக்கியுள்ளார் நெல்சன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 10ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை நெல்சன் இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்க இருக்கிறார். இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்க போகிறார் அனிருத். தற்போது தனது ஐம்பதாவது படத்தை இயக்கி வரும் தனுஷ், அந்த படத்தை முடித்ததும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நெல்சன் இயக்கும் இந்த படத்தில் நடிக்கப் போகிறார்.