படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

ஆந்திர மாநிலம் வாரங்கல்லை சேர்ந்தவர் ஈஷா ரெப்பா. 'லைப் இஸ் பியூட்டிபுல்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். 15க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ள ஈஷா தமிழில் 'ஓய்' படம் மூலம் அறிமுகமானார். நித்தம் ஒரு வானம், ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் சுதிர் பாபு ஜோடியாக 'மாயா மச்சின்திர' படத்திலும் ஜெ.டி. சக்கரவர்த்தி ஜோடியாக 'தயா' படத்திலும் நடித்து வருகிறார்.
தெலுங்கு பேசத் தெரிந்த தெலுங்கு நடிகைகளுக்கு வாய்ப்பு தராமல் மற்ற மொழி நடிகைகளுக்கே தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு தரப்படுகிறது என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
நான் தமிழ், மலையாள படங்களில் நடித்தபோது அங்குள்ளவர்கள் தெலுங்கு பட திரையுலகை பற்றி சிலாகித்து பேசுவதை கேட்டு இருக்கிறேன். ஆனால் தெலுங்கு பட உலகில் தெலுங்கு மொழி தெரியாதவர்களுக்குத்தான் அதிக வாய்ப்பு கொடுக்கிறார்கள். மற்ற மொழி கதாநாயகிகளை வைத்துத்தான் படங்கள் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் யாரும் கேட்பது இல்லை. அப்படி இருக்கும்போது வேற்றுமொழி நடிகர், நடிகைகளுக்கு அதிக வாய்ப்புகள் ஏன் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை. இங்கு மட்டுமல்ல, மற்ற மொழி திரையுலகிலும் மொழி தெரியாதவர்களுக்குத்தான் அதிக வாய்ப்புகள் கொடுக்கிறார்கள். இந்த நிலைமை மாறவேண்டும். என்றார்.