தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஆந்திர மாநிலம் வாரங்கல்லை சேர்ந்தவர் ஈஷா ரெப்பா. 'லைப் இஸ் பியூட்டிபுல்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். 15க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ள ஈஷா தமிழில் 'ஓய்' படம் மூலம் அறிமுகமானார். நித்தம் ஒரு வானம், ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் சுதிர் பாபு ஜோடியாக 'மாயா மச்சின்திர' படத்திலும் ஜெ.டி. சக்கரவர்த்தி ஜோடியாக 'தயா' படத்திலும் நடித்து வருகிறார்.
தெலுங்கு பேசத் தெரிந்த தெலுங்கு நடிகைகளுக்கு வாய்ப்பு தராமல் மற்ற மொழி நடிகைகளுக்கே தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு தரப்படுகிறது என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
நான் தமிழ், மலையாள படங்களில் நடித்தபோது அங்குள்ளவர்கள் தெலுங்கு பட திரையுலகை பற்றி சிலாகித்து பேசுவதை கேட்டு இருக்கிறேன். ஆனால் தெலுங்கு பட உலகில் தெலுங்கு மொழி தெரியாதவர்களுக்குத்தான் அதிக வாய்ப்பு கொடுக்கிறார்கள். மற்ற மொழி கதாநாயகிகளை வைத்துத்தான் படங்கள் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் யாரும் கேட்பது இல்லை. அப்படி இருக்கும்போது வேற்றுமொழி நடிகர், நடிகைகளுக்கு அதிக வாய்ப்புகள் ஏன் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை. இங்கு மட்டுமல்ல, மற்ற மொழி திரையுலகிலும் மொழி தெரியாதவர்களுக்குத்தான் அதிக வாய்ப்புகள் கொடுக்கிறார்கள். இந்த நிலைமை மாறவேண்டும். என்றார்.