தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ரஜினிகாந்த் தற்போது ‛ஜெயிலர்' மற்றும் லால் சலாம் ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து முடித்து விட்டார். இதில் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதை அடுத்து ஜெய்பீம் ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். சமீபகாலமாக இந்திய சினிமாவைச் சார்ந்த நடிகர்- நடிகைகள் மாலத்தீவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அங்கு தாங்கள் கடற்கரையில் ஜாலியாக சுற்றி திரிவது, கடல் நீரில் குளிப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இப்படியான நிலையில், தற்போது நடிகர் ரஜினியும் மாலத்தீவு சென்றுள்ளார். அவர் சென்ற இந்த தகவலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதோடு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.