ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் |
தமிழ் சினிமா எத்தனையோ விசித்திரமான படங்களைப் பார்த்திருக்கிறது. ஆனால், இப்போது விசித்திரமான கமெண்ட்டுகளைத்தான் அதிகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அப்படியான கமெண்ட்டுகளுக்கு அடித்தளமாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. அந்த கமெண்ட்டுகள் புதிதாக வரும் படங்களைப் பற்றித்தான் அதிகம் இருக்கிறது.
ஒரு புதிய படம் வெளிவந்ததும், படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால், இடைவேளைக்குப் பின் மோசமாக இருக்கிறது, மொக்கையாக இருக்கிறது. ஆனால், இடைவேளைக்கு முன் கலகலப்பாக நன்றாக இருக்கிறது என 'பின், முன்' என பிரித்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஒட்டுமொத்தமாக படம் நன்றாக இருக்கிறது என்ற கமெண்ட்டுகளை அபூர்வமாகத்தான் கேட்க முடிகிறது.
நேற்று வெளியான 'மாவீரன்' படம் பற்றி வரும் விமர்சனங்களும், ரசிகர்கள் கருத்துக்களும் இதையேதான் எதிரொலிக்கின்றன. இடைவேளை வரை சுவாரசியமாக இருக்கிறது, இடைவேளைக்குப் பின் சரியாக இல்லை, படம் எப்போது முடியும் என யோசிக்க வைக்கிறது என்ற கமெண்ட்டுகள்தான் அதிகம் வருகின்றன.
ஆனால், மூத்த இயக்குனர்களைக் கேட்டால் இடைவேளை வரை ரசிகர்களை அப்படி, இப்படி என ஏதாவது செய்து உட்கார வைத்துவிட்டு, இடைவேளைக்குப் பின் அழுத்தமான கதையைச் சொன்னால் போதும், அந்தப் படம் ஹிட் என்கிறார்கள். இருந்தாலும் இன்றைய இளம் இயக்குனர்கள், இடைவேளைக்குள் ஏதாவது செய்துவிட்டு, இடைவேளைக்குப் பின் திணற ஆரம்பித்துவிடுகிறார்கள் என்று தயாரிப்பாளர்கள் தரப்பிலும் கமெண்ட் கருத்து சொல்கிறார்கள்.