தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் ஜி.காளையப்பன் தயாரித்திருக்கும் படம் 'குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்'. இதில் ஸ்ரீதர், சிரஞ்சீவி, முருகன், ஜீவி, ரேஷ்மா, கேப்டன் கணேஷ், சரவணன், பஜார் பாபு, ரவி, கிருபா, சவுந்தர், விருமாண்டி, விக்னேஷ், ஏ.சோணை, சரண்யா, மெர்க்குரி சத்யா நடித்துள்ளனர். கிருஷ்டி இசையமைக்க, எம்.ஆர்.எம் ஜெய்சுரேஷ் - மோகன் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.
ஏ.சோணை இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது : நாகரீக உலகில் நகரங்கள் பரபரப்பாக இயங்கினாலும் பல கிராமங்களின் நிலை அப்படியேதான் இருக்கிறது. அதிலும் மலை கிராமத்து மக்களின் நிலைமை மிகவும் பின்தங்கியேதான் உள்ளது. அப்படிபட்ட மலைகிராமத்து இளைஞர்கள் நால்வர் வேலை தேடி அருகில் உள்ள மதுரை மாநகருக்கு வருகின்றனர்.
ஒரு இடத்தில் தங்கி வேலை செய்துவரும் இவர்களிடம் சிலர் வம்பு இழுத்து தொல்லை கொடுக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அந்த நால்வரிடமும் ஒரு கைத்துப்பாக்கி கிடைக்கிறது. அதனால் ஒரு விபரீதம் ஆகி நால்வரும் போலீசில் மாட்டுகின்றனர். அதிலிருந்து இவர்கள் எப்படி மீண்டு வருகின்றனர் என்பதை திரில்லுடன் நகைச்சுவையையும் கலந்து இயக்கி இருக்கிறேன் என்கிறார் இயக்குனர் ஏ.சோனை.