ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி என்.ராமசாமி, செயலாளர்கள் கதிரேசன், ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் அருள்பதி, துணைத்தலைவர் கே.ராஜன், தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஐட்ரீம் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர்.
பின்னர் அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்படும் நேரத்தை காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை அதிகரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 4 ஆயிரம் தியேட்டர்கள் இருந்தன. ஆனால் தற்போது ஆயிரமாக குறைந்துவிட்டன. ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட தியேட்டர்களில் கூட தற்போது 100 முதல் 150 பேர்தான் படம் பார்க்க வருகின்றனர். எனவே ஒரு திரையுடன் உள்ள பெரிய திரையரங்கத்தை, நான்கு திரைகள் கொண்ட திரையரங்கமாக மாற்ற பொதுப்பணித்துறை சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும். ஒரு திரையை 3 அல்லது 4 திரைகளாக மாற்றி விட்டால் சிறு பட்ஜெட் படங்களை திரையிட கூடுதல் வாய்ப்பு கிடைக்கும்.
திரையரங்கங்களில் 100 ரூபாய் வரையிலான டிக்கெட்களுக்கு 12 சதவிகிதமும், 100 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட்டுகளுக்கு 18 சதவிகிதமும் ஜி.எஸ்.டி. வரியாக விதிக்கப்படுகின்றது. இவற்றுடன் கூடுதலாக தமிழ்நாடு அரசால் 8 சதவீதம் உள்ளாட்சி வரி விதிக்கப்படுகிறது. இந்த வரிவிதிப்பால் திரைப்படத் துறையினர், விநியோகஸ்தர்கள் யாருக்கும் லாப, நஷ்டம் இல்லை. ஆனால் அந்த வரி உயர்வு பொதுமக்கள் மேல் விழுகிறது. எனவே, 8 சதவீத உள்ளாட்சி வரியை நீக்க வேண்டும். இந்த வரி நீக்கப்பட்டால் டிக்கெட் கட்டணத்தில் 8 சதவீதம் குறையும்.
முன்பு வழங்கப்பட்டது போன்று தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு மானியம், வரிச்சலுகையை மீண்டும் வழங்க உத்தரவிட வேண்டும். இந்த கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.