ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார். அதன் பிறகு அவரது விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஷாலும் சமீபத்தில் மாணவ மாணவிகளை சந்தித்தார். அப்போது மாணவி ஒருவர், நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தால் அவரது கட்சியில் நீங்கள் இணைவீர்களா? என்று அவரை நோக்கி ஒரு கேள்வி கேட்டார்.
அதற்கு விஷால் கூறுகையில், எல்லாமே கடவுள் கையில் தான் உள்ளது. கடவுளின் முடிவு எதுவாக இருக்கிறதோ அதன்படி நான் செயல்படுவேன். மேலும், அரசியல் என்பது சமூக சேவை மட்டுமே வியாபாரம் அல்ல. நாம் அனைவருமே அரசியலுக்குள் தான் இருந்து கொண்டிருக்கிறோம். யாரேனும் ஒருவருக்கு 50 ரூபாய் கொடுத்து உதவி செய்தால் கூட அவரும் அரசியல்வாதி தான் என்று அந்த மாணவியின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார் விஷால்.