ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ், தெலுங்கில் இயக்குனராக, நடிகராக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் சமுத்திரக்கனி. தெலுங்கில் பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் நடித்துள்ள 'ப்ரோ' படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இந்த வாரம் ஜுலை 28ம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்காக பேட்டிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி.
பேட்டி ஒன்றில் அவர் அடுத்து இயக்க உள்ள படங்கள் பற்றிய தகவலைச் சொல்லியுள்ளார். விரைவில் தமிழில் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம். அடுத்து துல்கர் சல்மான் நடிக்க, ராணா டகுபட்டி தயாரிக்கப் போகும் பான் இந்தியா படம் ஒன்றையும் இயக்க உள்ளாராம். இது பற்றிய அறிவிப்புகள் அடுத்து வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
ராணா டகுபட்டி குடும்பத்தினர் பல ஆண்டு காலமாக திரைப்படத் தயாரிப்பில் உள்ளனர். அவரது தாத்தா ராமா நாயுடு ஆரம்பித்த சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தமிழில் “வசந்த மாளிகை, தனிக்காட்டு ராஜா, மைக்கேல் ராஜ்'' ஆகிய படங்களைத் தயாரித்துள்ளனர். கடந்த வருடம் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான 'ப்ரின்ஸ்' படத்தை இணைந்து தயாரித்தனர். ராணா டகுபட்டி சில பிரம்மாண்டப் படங்களைத் தயாரிக்க உள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்துள்ளன.