துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ஒரு காலத்தில் காமெடி கிங்காக வலம் வந்த கவுண்டமணி, தற்போது புதியவர்களின் வருகையால் நடிப்பதை குறைத்துக் கொண்டு ஓய்வெடுத்து வருகிறார். அப்படியே நடித்தாலும் கதையின் நாயகனாகத்தான் நடிக்கிறார். பலர் நடிக்க அழைத்தும் மறுத்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு '49 ஓ' என்ற படத்தில் கதை நாயகனாக நடித்தார். இது ஒரு அரசியல் படம். அதன்பிறகு 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' என்ற படத்தில் நடித்தார். இது விவசாய அரசியல் படம்.
தற்போது அவர் சத்தமின்றி ஒரு அரசியல் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் டைட்டில் 'ஒத்த ஓட்டு முத்தையா'. மண்டேலா படத்தில் யோகி பாபு ஒரு ஓட்டுக்காரராக நடித்தது போன்று இதில் கவுண்டமணி ஒரு ஓட்டு வாக்காளராக நடிப்பதாக கூறப்படுகிறது. இதனை சசி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ரவி ராஜன் தயாரிக்கிறார், சாய் ராஜகோபல் இயக்குகிறார். சித்தார்த் விபின் இசை அமைக்கிறார், ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை பற்றிய மற்ற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன.