ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தனக்கான டப்பிங்கை பேசி முடித்துவிட்டு நேற்று முன்தினம் தான் ஓய்வெடுப்பதற்காக வெளிநாடு சென்றார் விஜய். இந்த நிலையில் வெளிநாட்டில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த அஜித்குமார் தற்போது சென்னை திரும்பி இருக்கிறார். விமான நிலையத்தில் அவர் வந்திறங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அப்போது விமான நிலையத்தில் ரசிகர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்களுடன் அஜித்குமார் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.
துணிவு படத்திற்கு பின் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கயிருப்பதால் தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பி இருக்கிறார் அஜித். அதனால் இன்னும் சில தினங்களில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.