குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

தெலுங்கில் சாய் ராஜேஷ் இயக்கத்தில், ஆனந்த் தேவரகொண்டா, விராஜ் அஷ்வின், வைஷ்ணவி சைதன்யா மற்றும் பலர் நடிக்க இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜுலை 14ம் தேதி வெளிவந்த படம் 'பேபி'. சுமார் 10 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் 70 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
குடிசைப் பகுதியில் வாழும் ஆனந்த், வைஷ்ணவி இருவரும் பள்ளியில் படித்த காலத்திலிருந்தே காதலிக்கிறார்கள். ஆனந்த் பெயில் ஆகிப் போனதால் ஆட்டோ ஓட்ட ஆரம்பிக்கிறார். வைஷ்ணவி கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறார். கல்லூரி வாழ்க்கையில் வைஷ்ணவிக்கு விராஜ் என்ற புதிய நண்பர் கிடைக்கிறார். அதன்பிறகு மூவரது வாழ்க்கையிலும் பெரும் திருப்பம் ஏற்படுகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை.
இந்தப் படத்தின் தமிழ், ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்க தற்போது கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம். உரிமையை விற்றுவிடலாமா அல்லது அந்த மொழிகளில் தாங்களே தயாரிக்கலாமா என தெலுங்கு படத்தைத் தயாரித்துள்ள நிறுவனம் யோசித்துக் கொண்டிருக்கிறதாம்.