ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

1982ம் ஆண்டு 'படையோட்டம்' என்ற மலையாள படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரியதர்ஷன். இதுவரை இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் 96 படங்களை இயக்கி உள்ளார். தமிழில் சின்ன மணிக்குயிலே, கோபுர வாசலிலே, சிநேகிதியே, லேசா லேசா, நிமிர், சில நேரங்களில் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய தமிழ் படமான 'காஞ்சீவரம்' சிறந்த நடிகருக்கான விருதை பிரகாஷ்ராஜுக்கும், சிறந்த இயக்னருக்கான விருதை பிரியதர்ஷனுக்கும் பெற்றுத் தந்தது.
தற்போது 'அப்பத்தா' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உளளது. இந்த படம் குறித்து பேட்டியளித்துள்ள பிரியதர்ஷன் 100 படங்கள் இயக்கி விட்டு ஓய்வு பெறப்போவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது "ஒரு வயதான அப்பத்தாவுக்கும், ஒரு நாய்க்கும் இடையிலான அன்பின் மூலம் மனிதர்களுக்கும் விலங்கிற்குமான ஆத்மார்த்தமான அன்பை பேசுகிற படம். இதுவரை 96 படங்களை இயக்கிய நான் இன்னும் 4 படங்கள் இயக்கி விட்டு 100 படத்துடன் ஓய்வெடுக்க இருக்கிறேன்.
இன்றைய இளம் தலைமுறையினர் புதிய சிந்தனையோடு வருகிறார்கள். ஒடிடி தளங்களின் வருகையால் சிறு பட்ஜெட் படங்களுக்கு வாசல் திறக்கப்பட்டிருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பெரிய நடிகர்களின் படங்கள் தியேட்டரில்தான் வெளியிடப்பட வேண்டும்" என்கிறார் பிரியதர்ஷன்.