தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் கல்யாணி பிரியதர்ஷன். அதன் பிறகு தற்போது ‛ஜீனி, மார்ஷல்' போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், மலையாளத்தில் டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள ‛லோகா சாப்டர்-1' என்ற படம் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி திரைக்கு வந்து 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து இருக்கிறது. லோகா படத்தில் அவரது நடிப்பை பார்த்துவிட்டு பல பாலிவுட் நடிகைகளும் பெருமையாக பேசி இருந்தார்கள்.
இந்த நிலையில் லோகா படத்தின் வெற்றி மூலம் தனக்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு குறித்து கல்யாணி பிரியதர்ஷன் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ‛‛லோகா படத்தின் மூலம் இந்திய அளவில் நான் கவனம் பெற்று விட்டேன். இது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. என்றாலும் இந்த வெற்றி, புகழ்ச்சியை நான் தலையில் ஏற்றிக்கொள்ள மாட்டேன். தொடர்ந்து சினிமாவுக்காக கடினமான உழைப்பை கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன். இன்னும் நிறைய படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்'' என தெரிவித்திருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.