ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
குக் வித் கோமாளி சீசன் 4 இறுதிப்போட்டி நடந்து முடிந்தது. இதில், சிவாங்கி தான் வெற்றி பெறுவார் என பலரும் கூறி வந்த நிலையில், இறுதி போட்டியில் மைம் கோபியே வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முடிவை ரசிகர்களும் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டனர். அதுமட்டுமில்லாமல் இதுவரை நடந்த சீசன்களிலேயே மைம் கோபி தான் முதல் ஆண் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மைம் கோபிக்கு பரிசுத்தொகையாக 5 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால், அந்த பணத்தை தனக்கு என்று இல்லாமல் புற்றுநோயால் பாதிக்கபட்டவர்களின் சிகிச்சைக்கு கொடுக்க போவதாக மைம் கோபி கூறியுள்ளார். மைம் கோபியின் இந்த செயலை பாராட்டி பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.