தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
எதிர்நீச்சல் தொடரின் மூலம் டிரெண்டிங் நடிகராக வலம் வரும் மாரிமுத்து. மனதில் பட்டதை பொதுவெளியில் ஓப்பனாக பேசக்கூடியவர். அவர் கொடுத்த பல நேர்காணல்களில் யாருக்கும் பயப்படாமல் வெளிப்படையாக பல கருத்துகளை கூறியுள்ளார். அண்மையில் நடைபெற்ற ஒரு விவாத நிகழ்ச்சியில் மாரிமுத்து ஜோதிடர்களுக்கு எதிராக அடுக்கடுக்காக பல கருத்துகளை கூறி எதிர்தரப்பினரை வாயடைத்தார். அந்த வீடியோவானது தொடர்ந்து சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் வைரலானது. தற்போது அந்த வீடியோவை பார்த்த பழ.ஆறுமுகம் என்ற நபர் மாரிமுத்துவின் கருத்துகளை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என கூறி வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸுக்கு மாரிமுத்து 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க தவறும் பட்சத்தில் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்போவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.