தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

'ஓ மை கடவுளே, டிராகன்' போன்ற படங்களை இயக்கியவர் அஸ்வத் மாரிமுத்து. இவர் அடுத்தபடியாக சிம்பு நடிக்கும் படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றுவதற்கு புதிய நபர்கள் தேவை என்று சமூக வலைதளங்களில் அவர் ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார். அதை பார்த்துவிட்டு 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளார்கள்.
இந்த நிலையில் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்தியில், '10 உதவி இயக்குனர்களை மட்டுமே எடுப்பதற்கு முதலில் திட்டமிட்டிருந்தேன். ஆனால் இப்போது இந்த 15 ஆயிரம் பேரில் இருந்து என்னுடைய அடுத்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து 20 நபர்களை தேர்வு செய்யப் போகிறேன். என்னை டேக் செய்து சோசியல் மீடியாவில் பதிவிடும் அனைவருக்கும் இதை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று ஒரு பதிவு போடுகிறார் அஸ்வத் மாரிமுத்து.