சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழில் சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளிவந்த ' டிராகன்' படம் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் இந்த படத்தை பார்த்த பிறகு அஸ்வத் மாரிமுத்து மற்றும் படக்குழுவை அழைத்து பாராட்டியுள்ளார்.
இது குறித்து அஸ்வந்த் மாரிமுத்து வெளியிட்ட பதிவில், "என் நண்பர்களுக்கு தெரியும், நான் எவ்வளவு ஆசையா அவரை சந்திக்கணும்னு உழைச்சிட்டு இருந்தேன்னு. என் திறமையாலயும் உழைப்பாலயும் மட்டும் அவரை சந்திக்கணும், ஒரு நாள் அவரோட வேலை செய்யணும்னு நினைச்சேன். வேலை பார்க்க முடியுமான்னு தெரியல, ஆனா அவரை சந்திச்சிட்டேன். அவருக்கு நேர் எதிரா உட்கார்ந்துட்டேன். எப்போதும் நான்தான் ரொம்ப பேசுவேன், என் டீம் நான் எவ்ளோ பெரிய ரசிகன்னு தெரிஞ்சு, நான் பேசுவேன்னு காத்துகிட்டு இருந்தாங்க. ஆனா, அவர் என்னை உற்று பார்த்தப்போ, என் கண்ணுல தானா கண்ணீர் வந்துடுச்சு! என் டீம் ஆச்சரியப்பட்டாங்க! ஏன்? அந்த மனுஷன் மேல அவ்வளவு பாசம்! எவ்ளோ? அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது" என அஸ்வத் மாரிமுத்து பதிவிட்டுள்ளார்.