இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ' டைகர் நாகேஸ்வரா ராவ்'. நுபூர் சனோன், காயத்ரி பரத்வாஜ், ரேணு தேசாய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை அபிஷேக் அகர்வால் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
உண்மை சம்பவத்தை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் ரவி தேஜா நடிப்பில் உருவாகும் முதல் பான் இந்திய படமாகும். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படம் வருகின்ற அக்டோபர் 20ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்த நிலையில் இந்த படம் தள்ளி போவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்த நிலையில் நேற்று படக்குழுவினர்கள் இது குறித்து தெரிவித்துள்ளனர். அதன்படி, " எந்த வித அடிப்படை காரணங்கள் இல்லாமல் சிலர் ' டைகர் நாகேஸ்வரா ராவ்' படம் தள்ளி போவதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஏனெனில், எங்கள் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . அதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் எங்கள் படத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளனர். மேலும், ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை வருகின்ற அக்டோபர் 20ம் தேதி அன்று வெளியாகும் என உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கு ஒரு நாளுக்கு முன்பு தான் விஜய் நடிக்கும் லியோ, பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படங்கள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.