தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

1970களில் அறிமுகமாகி 90 வரையில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜெயசுதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 2009ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். அந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதே தொகுதியில் நடந்த அடுத்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.
தேர்தலில் தோல்வி அடைந்ததால் கட்சி தன்னை புறக்கணிப்பதாகவும், தோற்கடித்ததும் காங்கிரஸ் கட்சிதான் என்று குற்றம்சாட்டி பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். பின்னர் அதிலிருந்தும் விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதிலிருந்து விலகி தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். டில்லியில் உள்ள பா.ஜ.க. மத்திய அலுவலகத்தில் தெலுங்கானா மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் தருண் சுக், மாநில தலைவர் ஜி.கிஷன் ரெட்டி, தேசிய துணைத் தலைவர் டி.கே.அருணா ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
இதுகுறித்து ஜெயசுதா கூறும்போது "பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால தலைமையின்கீழ் நாட்டின் முன்னேற்றம் எனக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுதான் என்னை பா.ஜ.க.வில் சேரவைத்தது. மாற்றத்தை விரும்பும் உணர்வாலேயே நான் இந்தக் கட்சியில் இணைந்துள்ளேன். இனிமேல் நான் நடிப்பைவிட அரசியலுக்கே முக்கியத்துவம் அளிப்பேன் " என்றார்.