ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் , தமன்னா, மோகன்லால், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படம் ஆக.10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதற்கான பணிகள் படநிறுவனம் தரப்பில் நடந்து வருகிறது. குறிப்பாக, இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'காவாலா' பாடல் தற்போது வரை டிரெண்டிங்கில் உள்ளது. நடிகர்கள் உள்பட அனைவரும் இந்த பாடலுக்கு வைப் செய்து வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று ஜெயிலர் திரைப்படத்தை ப்ரோமோஷன் செய்யும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 8 கிளைகளுடன் சென்னை மற்றும் பெங்களூருவில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்று ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாவதைத் தொடர்ந்து அவர்களது நிறுவன ஊழியர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாக உள்ள நிலையில், எங்களது HR டிபார்ட்மென்டுக்கு விடுப்பு விண்ணப்பங்கள் குவிவதைத் தடுக்க, ஆகஸ்ட் 10ம் தேதி எங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளது.
மேலும், எங்கள் பணியாளர்களின் சிரமத்தைக் குறைக்க, அவர்கள் அனைவருக்கும் ஜெயிலர் படத்திற்கான இலவச டிக்கெட்களையும் நாங்கள் வழங்குகின்றோம் என்றும் அறிவித்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் சென்னை, பெங்களூர், திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் மற்றும் அழகப்பன் நகரில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் எங்கள் தாத்தாவுக்கும், எங்கள் அப்பாவிற்கும், எங்களுக்கும், எங்கள் பிள்ளைகள் மற்றும் பேரன்களுக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்" என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. அந்த அறிவிப்பின் இறுதியில் 'ரஜினிகாந்த் வாழ்க்' என்ற பதிவுடன் அந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.