துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
கடந்த 2008ம் ஆண்டில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் வாரணம் ஆயிரம். அவருடன் சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்டோர் நடித்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். தமிழில் வரவேற்பை பெற்ற இந்த படம் தெலுங்கு பதிப்பில் 'சூர்யா சன் ஆப் கிருஷ்ணன்' என்ற பெயரில் வெளியாகி அங்கும் வரவேற்பைப் பெற்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரீ-ரிலீஸானது. இந்த படத்திற்கு இப்போதும் வரவேற்பு கிடைத்துள்ளது. இன்றைய தலைமுறை இளைஞர்கள் தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இப்படம் இருதினங்களில் மட்டும் சுமார் ரூ.2 கோடி வசூலை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சூர்யா சன் ஆப் கிருஷ்ணன் மறுவெளியீட்டிற்கு கிடைத்த வரவேற்புக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‛‛இந்த அன்பு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை தருகிறது. படக்குழுவினர், ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள்(ரசிகர்கள்) என்னை பிரமிக்க வைக்கிறீர்கள்'' என குறிப்பிட்டு, தியேட்டரில் ரசிகர்களுக்கு இந்த படத்திற்கு கொடுத்த வரவேற்பு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.