இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படம் வருகிற 10-ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் ரஜினி. இந்த படத்தையடுத்து ஞானவேல் இயக்கும் தனது 170 வது படத்தில் நடிக்கப் போகிறார். ரஜினியுடன், அமிதாப்பச்சன், நானி, பகத்பாசில் என பலர் இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது கூத்துப்பட்டறையை சார்ந்த பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கயிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த கதாபாத்திரங்களில் புதுமுகங்களை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த ஞானவேல், புதுமுகங்கள் அதிகப்படியான டேக் வாங்கினால் அது ரஜினியையும் கஷ்டப்படுத்தும். இதனால் ஏற்கனவே கூத்து பட்டறையில் பயிற்சி பெற்று பல படங்களில் நடித்த சிறந்த கலைஞர்களை இந்த படத்தில் ரஜினி உடன் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளாராம்.