தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படம் வருகிற 10-ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் ரஜினி. இந்த படத்தையடுத்து ஞானவேல் இயக்கும் தனது 170 வது படத்தில் நடிக்கப் போகிறார். ரஜினியுடன், அமிதாப்பச்சன், நானி, பகத்பாசில் என பலர் இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது கூத்துப்பட்டறையை சார்ந்த பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கயிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த கதாபாத்திரங்களில் புதுமுகங்களை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த ஞானவேல், புதுமுகங்கள் அதிகப்படியான டேக் வாங்கினால் அது ரஜினியையும் கஷ்டப்படுத்தும். இதனால் ஏற்கனவே கூத்து பட்டறையில் பயிற்சி பெற்று பல படங்களில் நடித்த சிறந்த கலைஞர்களை இந்த படத்தில் ரஜினி உடன் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளாராம்.