இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி (நாளை) வெளியாகிறது. அதே சமயம் மலையாளத்தில் இயக்குனர் சாகிர் மாடத்தில் என்பவர் ஜெயிலில் நடப்பது போன்ற வேறு ஒரு கதை அம்சம் கொண்ட படத்தை உருவாக்கி, அதற்கு ஜெயிலர் என்ற டைட்டிலையும் வைத்திருக்கிறார்.. இந்த படமும் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி தான் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய படமாக ஜெயிலர் வெளியாவதால் மலையாளத்தில் இந்த சின்ன ஜெயிலர் படத்திற்கு குறைவான எண்ணிக்கையிலே திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்தே ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் டைட்டிலை மலையாளத்தில் மாற்றி வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து புலம்பி வந்தார் இயக்குனர். ஆனாலும் தமிழில் ஜெயிலர் படத்தை தயாரித்த நிறுவனமும் கேரள திரையரங்குகளும் இவரது கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை.
அதனால் இறுதி நேரத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அப்படி எதிர்பார்த்தபடியே மலையாள ஜெயிலர் திரைப்படம் தற்போது ஆகஸ்ட் 10ல் ரிலீஸ் ஆவதில் இருந்து பின்வாங்கி மறுதேதி குறிப்பிடப்படாமல் அதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.