ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழில் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, வெற்றி கொடிகட்டு, பாண்டவர் பூமி போன்ற நல்ல படங்களை இயக்கியவர் சேரன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ஜெ.கே எனும் நண்பனின் வாழ்க்கை, திருமணம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. கடந்த சில வருடங்களாக இவர் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் அந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இனி அந்தபடம் துவங்க சாத்தியமில்லை என சேரன் கூறினார்.
இந்நிலையில் லிவ் ஒடிடி தளத்திற்காக புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார் சேரன். இதனை நடிகர் சரத்குமார் வழங்குகிறார். இந்த தொடரில் பிரசன்னா, ஆரி, கலையரசன், திவ்ய பாரதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விரைவில் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடரை 6 எபிசோடுகள் ஆக உருவாக்கியுள்ளனர். இந்த வெப் தொடருக்கு ' ஜர்னி' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.