இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மறைந்த நடிகர் எம்.ஆர்.ஆர் வாசுவின் மனைவியும், நடிகர் வாசு விக்ரமின் தாயாருமான லலிதாம்பாள் (வயது 83) உடல்நிலை குறைவால் சென்னையில் நேற்று (ஆக., 11) மாலை 7.00 மணி அளவில் காலமானார். இவருக்கு வாசு விக்ரம், பாலாஜி என்ற இரு மகன்களும், இரு மகள்களும் உள்ளனர்.
மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகன் எம்.ஆர்.ஆர் வாசு. ஏராளமான குணச்சித்ர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார். இவரது மகன் வாசு விக்ரம். பாலைவனத்தில் பட்டாம்பூச்சி, படத்தின் மூலமாக திரையில் அறிமுகமான அவர் தொடர்ந்து நீங்களும் ஹீரோதான், பரதன், மஞ்சுவிரட்டு, படையப்பா, சிவாஜி, சமுத்திரம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் குணசித்ரம், வில்லன் மற்றும் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். சித்தி, செல்லமே, செல்வி போன்ற டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
கோடம்பாக்கம் ஆ.என்.நம்பியார் தெருவில் குடும்பத்தினர் உடன் வசித்து வருகிறார். இவரது தாயார் லலிதாம்பாள் வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் இரங்கல்
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "நடிகர் எம்ஆர்ஆர் வாசு அவர்களின் மனைவியும், நடிகர் வாசு விக்ரமின் தாயாருமான திருமதி. லலிதாம்மாள் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என தெரிவித்துள்ளார்.
நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாளும் நேற்று தான் காலமானார். ஒரேநாளில் இரண்டு நடிகர்களின் தாயார் அடுத்தடுத்து மறைந்தது தமிழ் திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.