அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
1970 மற்றும் 80களில் முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் ஜெயப்பிரதா. தமிழில் குறைவான படங்களில் நடித்தாலும் தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பு தவிர அரசியல், தொழில் துறையிலும் ஈடுபட்டு வந்தார்.
சென்னை, அண்ணா சாலையில் திரையரங்கம் நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் வசூலிக்கப்பட்ட இ.எஸ்.ஐ. தொகையை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என்ற புகார் எழுந்தது. இதுதொடர்பாக, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு பல வருடங்களாக நடந்து வந்தது. இதை எதிர்த்து ஜெயப்பிரதா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று தீர்பளித்த நீதிமன்றம், ஜெயப்பிரதா மற்றும் அவரது பங்குதாரர்கள் இருவர் ஆகியோருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தொழிலாளர்களிடம் வசூலித்த தொகையை தந்து விடுவதாக ஜெயப்பிரதா தரப்பு கூறியதை நீதிமன்றம் ஏற்கவில்லை. தீர்ப்பை எதிர்த்து ஜெயப்பிரதா மேல்முறையீடு செய்வார் என்று தெரிகிறது.