ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
எ கியூப் மூவீஸ் ஆப் நிறுவனம் தயாரிக்கும் படம் 'எக்ஸ் ஆர்மி'. இதில் ஜெய் ஆகாஷ் முன்னாள் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். கதாநாயகிகளாக அஷ்மிதா, அக்ஷயா நடிக்கிறார்கள். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின், ராஜ்மித்ரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சாய்பிரபா மீனா இயக்குகிறார். ஏ.சி.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.சதீஷ் குமார் இசை அமைக்கிறார்.
படம் பற்றி ஜெய் ஆகாஷ் கூறியதாவது: ராணுவத்தில் பணிபுரிந்து ஓயுவு பெறும் வீரர் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்களை கண்டு ஆவேசம் அடைகிறார். அதை தட்டி கேட்க முடிவு செய்து ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றிய எக்ஸ் ஆர்மி மேன்கள், மற்றும் போரில் காயம் அடைந்து ஊனமுற்று இன்னும் தேச பக்தியுடன் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களை ஒரு படைபோல் திரட்டி பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யும் அக்கிரமக்காரர்களை தேடிப் பிடித்து எப்படி பழிவாங்குகிறார் என்பதை ஆக்ஷன் அதிரடியுடன் இப்படம் சொல்கிறது.
எல்லையை காப்பாற்றியவர்கள் நாட்டுக்குள் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டி கேட்டு அவர்களை எப்படி காக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மையக்கரு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, பெங்களுர், மும்பையில் நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வருகிறது. என்றார் ஜெய் ஆகாஷ்.