பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான சூப்பர் ஹிட் படமான திரிஷ்யம் மூலம் முதன்முறையாக நடிகர் மோகன்லாலும், இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் கைகோர்த்தனர். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து திரிஷ்யம் 2, டுவல்த் மேன் மற்றும் ராம் என நான்கு படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர். இதில் ராம் படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் பாதியிலேயே நிற்கிறது. மற்ற மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றன. இந்த நிலையில் ஐந்தாவதாக நேரு என்கிற படத்திற்காக இணைந்துள்ளனர் மோகன்லாலும், ஜீத்து ஜோசப்பும்.
மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் 33 வது படமாக இது உருவாக இருக்கிறது. நேரு அதாவது உண்மை என்கிற டைட்டிலுடன் நீதியை தேடி என்கிற டேக்லைனுடன் இந்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் மோகன்லால். மேலும் இந்த போஸ்டரை பார்க்கும்போது இது நீதிமன்றம் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடிகிறது.