தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. தற்போது முழுநேர அரசியல்வாதியாக இருப்பவர் ஆந்திர மாநில சுற்றுலா, கலாச்சார விவகாரங்கள், இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார்.
சித்தூர் மாவட்டம் நகரி புறநகர் மண்டலம் டி.ஆர்.கண்ட்ரிகா கிராமத்தில் உள்ள ஸ்ரீ தேசம்மா கோயிலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆடி மாத விழாவின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட பட்டு வஸ்திரங்களை ரோஜா சமர்ப்பித்தார். தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டார். மேலும் கோயிலில் பக்தர்களுக்கு அம்மனின் ஆடி மாதக் கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அம்மனை தரிசனம் செய்த அமைச்சர் ரோஜாவுடன் அவரது சகோதரர்கள் ஒய்.ராம்பிரசாத் ரெட்டி, கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கோயிலில் வேத பண்டிதர்கள் பூர்ணகும்பத்துடன் அமைச்சருக்கு வரவேற்பு அளித்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.