தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் |

இயக்குனர் மோகன் ராஜா கடந்த 2011ல் விஜய்யை வைத்து ' வேலாயுதம்' படத்தை இயக்கினார். அந்த படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பைப் பெற்றது. ஆனாலும், அதன் பிறகு ஒவ்வொரு முறையும் விஜய் புதிய படத்திற்கு கதை கேட்கும் போது மோகன் ராஜா பெயர் அடிபடும்.
சமீபத்தில் மோகன் ராஜா அளித்த பேட்டி ஒன்றில், "வேலாயுதம் படத்திற்கு பிறகு விஜய்-க்கு இரட்டை வேடத்தில் ஒரு கதையை உருவாக்கினேன். அந்த கதை அவருக்கும் பிடித்திருந்தது. ஆனால், அந்த சமயத்தில் தடம் படம் வெளிவந்தது. தடம் படத்திற்கு நான் உருவாக்கிய கதைக்கும் நிறைய ஒற்றுமை இருந்தது. இப்போது அந்த கதையில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளேன். இது அல்லாமல் புதிதாக இரண்டு கதைகள் விஜய்க்கு தயார் செய்துள்ளேன். விரைவில் விஜய் உடன் இணைவேன்'' என தனது ஆசையை தெரிவித்துள்ளார் மோகன் ராஜா.