திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தற்போது 50 சதவிகிதத்திற்கும் மேல் ஹாரர் கலந்த த்ரில்லர் படங்கள் தயாராகின்றன. குறைந்த பட்ஜெட்டில் நிறைவான ஒரு ஹாரர் படத்தை எடுத்து விட முடியும் என்கிற நிலையே இதற்கு காரணம். இதனை கருத்தில் கொண்டு ஹாரர் படங்களை மட்டும் தயாரிப்பதற்காக 'நைட்ஷிப்ட் ஸ்டூடியோ' என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளனர். தயாரிப்பாளர் ஒய் நாட் சசிகாந்த் மற்றும் தயாரிப்பாளரான சக்ரவர்த்தி ராமச்சந்திரா ஆகியோர் இணைந்து இதனை தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சசிகாந்த் கூறும்போது, "உள்நாட்டு ஹாரர் - த்ரில்லர் படங்களை உலகிற்கு எடுத்துச் செல்ல இது ஒரு அற்புதமான வாய்ப்பு. எனது ஒய் நாட் ஸ்டுடியோஸ் எப்போதுமே புது வகையான முயற்சிகளுக்கு வழி கொடுத்து வருகிறது, அதே சித்தாந்தத்தை கைப்பற்றி நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸின் முயற்சிகளும் அமையும்." என்றார்.