ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் கடந்த பொங்கலையொட்டி வெளியானது. தமிழ், தெலுங்கில் வெளியான இப்படம், ஒட்டு மொத்தமாக ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக கேரளாவில் 13 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கேரளாவில் இந்த படத்தை விநியோகம் செய்த ராய் அகஸ்டின் என்பவர், தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், படத்துக்கு தான் கொடுத்த கூடுதல் அட்வான்ஸ் தொகையை திரும்ப பெற்றுத் தருமாறு, நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதி உள்ளார். இதுமட்டுமல்லாது, தான் கொடுத்த பணத்துக்கு ஜிஎஸ்டி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விஷயம் ரசிகர்கள் மற்றும் திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.