இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான நமீதா, ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, கணவர் வீரேந்திராவுடன் சென்றார். முகூர்த்த தினம் என்பதால், கோவிலில் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இந்நிலையில் நமீதா வந்ததை அறிந்த பலர், அவருடன் போட்டோ எடுக்கவும், செல்பி எடுக்கவும் முட்டி மோதினர். அவரும் பலருடன் போட்டோ எடுத்துக் கொண்டார். சுவாமி தரிசனம் முடிந்தவுடன் உடனடியாக கிளம்பி சென்று விட்டார். முன்னதாக கோவில் தல வரலாற்றை, கோவில் புலவர் அறிவிடம், அவர் கேட்டறிந்தார்.