தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‛கருமேகங்கள் கலைகின்றன'. பாரதிராஜா, கவுதம் மேனன், அதிதி பாலன், யோகி பாபு முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் பேசிய தங்கர் பச்சான், ‛‛சமூகம் கேட்கும் கதையை உருவாக்க வேண்டி உள்ளது. ஆனால் அதற்கு தயாரிப்பாளை தேடி அலைய வேண்டி உள்ளது. அப்படியே கிடைத்தால் படத்தை வெளியிடுவது அதைவிட சிரமம். மக்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க வேண்டும். பெரிய நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு நல்ல படத்துக்கு கிடைப்பதில்லை. கண் முன் 100 பேரை கொல்வதை பார்க்கும் குழந்தைகள் என்னவாக வளரும். ரூ.100 கோடி, ரூ.200 கோடி என பணம் வந்தால் போதுமா. அறிவு வேண்டாமா. கலைஞனுக்கு பொறுப்பும், கடமையும் உண்டு. 10 மசாலா படங்களை காட்டினால் குழந்தைகள் அழிந்தே போய்விடுவார்கள். நான் ஒரு நல்ல படத்தை எடுத்து இருக்கிறேன் வந்து பாருங்கள் என கெஞ்சிக் கொண்டே இருக்க வேண்டுமா?'' என ஆதங்கமாக பேசினார்.