இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1983ல் வெளியான படம் துடிக்கும் கரங்கள். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு எஸ்பி பாலசுப்ரமணியம் இசையமைத்து இருந்தார். தற்போது 40 வருடங்கள் கழித்து இதே பெயரில் நடிகர் விமல் நடிக்கும் படம் தயாராகியுள்ளது. இயக்குனர் வேலுதாஸ் இயக்கியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை சமீபத்தில் நடத்தினார்கள்.
ஆனால்
படக்குழுவினர் மட்டுமல்லாது விழாவில் கலந்து கொண்ட சிறப்பு
விருந்தினர்களும் எந்த இடத்திலுமே ரஜினிகாந்த்திற்கு நன்றி தெரிவிக்கும்
விதமாகவோ அவரைப் பற்றியோ எந்த ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்லை.
பார்வையாளர்களில் ஒருவர்தான் இந்தப் படத்திற்காக ரஜினிகாந்த்திற்கு நன்றி
சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டதை பார்க்க முடிந்தது. ரஜினிகாந்த் பெயரை
வலுக்கட்டாயமாக பொது மேடைகளில் இழுத்து தங்களது படங்களை பலரும் புரமோஷன்
செய்து வரும் நிலையில் அவரது பட டைட்டிலிலேயே ஒரு படத்தை உருவாக்கி விட்டு
அவர் பற்றி ஒரு வார்த்தை கூட துடிக்கும் கரங்கள் படக்குழு பேசாதது
ஆச்சரியம் தான்.