அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
சந்திரலேகா தொடர் நீண்ட நாட்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்தது. 2014 ஆம் ஆண்டு ஆரம்பமான இந்த தொடர் 6 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி கடந்த 2022 ஆம் ஆண்டில் தான் நிறைவடைந்தது. இந்த 6 ஆண்டிலும் இந்த தொடரில் நடித்த இரண்டு கதாநாயகிகளான ஸ்வேதா பண்டேகரும், நாகஸ்ரீயும் இறுதி வரை மாறவில்லை. அதனாலேயே இவர்களுக்கு ரசிகர்கள் அதிகம். அதிலும், வில்லியாக நடித்த நாகஸ்ரீ தமிழில் அறிமுகமான முதல் சீரியலிலேயே வில்லியாக அருமையாக நடித்திருந்தார். இந்த தொடர் முடிந்த பிறகு ஸ்வேதா பண்டேகர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். ஆனால், நாகஸ்ரீ கன்னடத்தில் பிசியாக சீரியல் நடித்து வருகிறார். அவர் சக நடிகர்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் தமிழ் ரசிகர்கள் நாகஸ்ரீயை சீக்கிரமே தமிழில் கம்பேக் கொடுக்கச் சொல்லி கேட்டு வருகின்றனர்.