தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை சோபிதா துலிபாலா. அதைவிட இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் நெருங்கிய நட்பில் இருக்கிறார் என்கிற செய்திகளுக்காகவே இன்னும் பிரபலமானவர். கடந்த 2013ல் நடைபெற்ற மிஸ் இந்தியா எர்த் அழகிப்போட்டியில் கலந்து கொண்டு டைட்டில் வென்ற இவர் அதன் பிறகு சினிமாவில் நுழைந்தார். அந்த அழகிப்போட்டியில் நடுவர்களில் ஒருவராக இருந்தவர் நடிகை அசின்.
அப்போது இறுதிச்சுற்றில் சோபிதாவிடம் அசின் கேள்வி கேட்கும்போது, “கல்லூரிகளில் மாணவிகள் இப்படித்தான் உடை அணிந்து வரவேண்டும் என அரசாங்கமோ கல்லூரி நிர்வாகமோ நிர்பந்தப்படுத்தினால் உங்களது பதில் என்னவாக இருக்கும்” என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த சோபிதா, “ மாணவிகள் உடை அணியும் விஷயத்தில் கல்லூரி நிர்வாகமும் அரசாங்கமும் தலையிடக்கூடாது. இந்த விஷயத்தில் அவர்கள் கலாச்சார காவலர்களாக தங்களை மாற்றிக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று பதில் அளித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் திடீரென வைரலாக பரவி வருகிறது.