இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்துள்ள ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள இந்த படம் ஹிந்தியை தாண்டி அடுத்தபடியாக தமிழில் மிகுந்த கவனம் செலுத்தி புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. காரணம் அட்லீயையும் தாண்டி இந்தப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் வில்லனாக விஜய்சேதுபதியும் நடித்திருப்பது தான். கூடவே அனிருத்தும் இந்த படத்தில் இசையமைப்பாளராக இணைந்திருப்பதால் ஹிந்தியை தாண்டி ஒரு தமிழ் படமாகவே இது புரமோட் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு விஜய்சேதுபதி பேசும்போது, “நான் பள்ளியில் படித்த காலத்தில் ஒரு பெண்ணை விரும்பினேன். எல்லா பெண்களுக்கும் 96 ஜானு போல இப்படி ஒரு கதை இருக்கும். ஆனால் அந்த பெண் ஷாரூக்கான் மீது மிகப்பெரிய காதலில் இருந்தார். அந்த சமயத்தில் என் காதலுக்கு வில்லனாக இருந்தவர் ஷாரூக்கான் கான். அதற்காக அவரை பழிவாங்க நினைத்திருந்தேன். இந்த ஜவான் படத்தின் மூலம் அது நிறைவேறி உள்ளது'' என்று கூறினார்.