தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்துள்ள ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள இந்த படம் ஹிந்தியை தாண்டி அடுத்தபடியாக தமிழில் மிகுந்த கவனம் செலுத்தி புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. காரணம் அட்லீயையும் தாண்டி இந்தப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் வில்லனாக விஜய்சேதுபதியும் நடித்திருப்பது தான். கூடவே அனிருத்தும் இந்த படத்தில் இசையமைப்பாளராக இணைந்திருப்பதால் ஹிந்தியை தாண்டி ஒரு தமிழ் படமாகவே இது புரமோட் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு விஜய்சேதுபதி பேசும்போது, “நான் பள்ளியில் படித்த காலத்தில் ஒரு பெண்ணை விரும்பினேன். எல்லா பெண்களுக்கும் 96 ஜானு போல இப்படி ஒரு கதை இருக்கும். ஆனால் அந்த பெண் ஷாரூக்கான் மீது மிகப்பெரிய காதலில் இருந்தார். அந்த சமயத்தில் என் காதலுக்கு வில்லனாக இருந்தவர் ஷாரூக்கான் கான். அதற்காக அவரை பழிவாங்க நினைத்திருந்தேன். இந்த ஜவான் படத்தின் மூலம் அது நிறைவேறி உள்ளது'' என்று கூறினார்.